சாத்தான்குளம் சம்பவத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் பெண் போலீஸ் கைதாக வாய்ப்பு!?
கொலை சம்பவத்தை குழப்ப சிபிசிஐடிக்கு ஒரு மாதிரியும், சிபிஐ விசாரணையில் வேறு மாதிரியும் சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் போலீஸ் கைதாகலாம்?!
சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அதற்கு முன்னதாக இவ்வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது பெறப்பட்ட சாட்சியங்கள், திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் சிபிசிஐடி போலீஸ் ஒப்படைத்து விட்டது.
இந்த நிலையில் சிபிசிஐடி அதிகாரிகளுடன் சிபிஐ அதிகாரிகள் நேற்று 4 மணி நேரம் ஆலோசனை செய்தனர். சிபிசிஐடி விசாரணையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை சிபிஐ விசாரணையுடன் ஒப்பிட்டும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் பெண் போலீஸ் அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாக கூறப்படுகிறது.
சிபிஐ விசாரணையில் சாத்தான்குளம் காவல் நிலைய பெண் போலீஸ் ...
