கொரானா பரவலின் தீவிரம் அதிகரிக்கும் போது மதுக்கடைகளை திறப்பது ஆபத்தானது – கோடங்கி
கொரானா பரவலின் தீவிரம் அதிகரிக்கும் போது மதுக்கடைகளை திறப்பது ஆபத்தானது - கோடங்கி
உலகளாவிய முறையில் மக்களை கடந்த 2 மாதங்களாக வீட்டுக்குள் முடக்கி போட்டிருக்கும் கொரானா வைரஸ் பரவலை தடுக்க தொடர்ந்து பல்வேறு வகையான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகிறது.
தமிழகத்தில் கொரானா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. அதோடு தலை நகரமான சென்னை அதிகப்படியான பாதிப்பை தினமும் சந்திக்கிறது. நோயாளிகள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் வேலை வாய்ப்பை இழந்து வறுமையில் இருந்தாலும் மதுபான கடைகள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான அடித்தட்டு மக்களுக்கு பெறும் ஆறுதலாக இருந்தது.
கொரானா தாக்கம் குறைந்து முற்றிலும் ஒழிக்கப்படும் அதே நேரம் மூடப்பட்ட மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி பூரண மதுவிலக்கு அமல் படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதை எல்லாம் மனதில் வைக்க...
