மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கம் – தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை சிம்புவைத் தவிர எந்த ஒரு ஹீரோவுக்கும் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டு இருக்காது.
பிரமாண்டமாக அறிவிக்கப்பட்ட படத்தில் இருந்து திடீரென ஹீரோவையே தூக்கி எறிந்து விட்டு அதே பெயரில் அதே இயக்குனர் வைத்து மீண்டும் படம் தயாரிப்பேன். அந்த அறிவிப்பு வரும் காத்திருங்கள் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு வெளியிட்டதுதான் இப்போது கோலிவுட் ஹாட் டாப்பிக்..
அந்த அறிக்கை விவரம்:
வணக்கம்... நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார்.
தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி... துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில்...
