வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கம் – தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு

தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை சிம்புவைத் தவிர எந்த ஒரு ஹீரோவுக்கும் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டு இருக்காது.

பிரமாண்டமாக அறிவிக்கப்பட்ட படத்தில் இருந்து திடீரென ஹீரோவையே தூக்கி எறிந்து விட்டு அதே பெயரில் அதே இயக்குனர் வைத்து மீண்டும் படம் தயாரிப்பேன். அந்த அறிவிப்பு வரும் காத்திருங்கள் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு வெளியிட்டதுதான் இப்போது கோலிவுட் ஹாட் டாப்பிக்..

அந்த அறிக்கை விவரம்:

வணக்கம்… நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார்.

தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி… துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.

அதனால் சிம்பு “நடிக்க இருந்த” மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!

-சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்

650 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன