CAA, NBR சட்டங்களால் உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயர் குறைந்து வருகிறது – தெலங்கானா முதல்வர் ஆதங்கம்!
CAA, NBR சட்டங்களால் உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயர் குறைந்து வருகிறது - தெலங்கானா முதல்வர் ஆதங்கம்!
தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) மற்றும் மக்கள் தொகை பதிவேடு (என்.பி. ஆர்) குறித்து நடந்த விவாதத்தில் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் பேசியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக வலிமையான தீர்மானம் கொண்டுவந்து நாட்டுக்கு செய்தி சொல்ல வேண்டும்.
என்னிடம் கூட பிறப்புச் சான்றிதல் கிடையாது. அப்படி இருக்கும் போது நான் எப்படி என் தந்தையின் பிறந்த இடம், பிறந்த தேதியை நான் எப்படி நிரூபிக்க முடியும். எனக்கு கூட என்.பி.ஆரை நினைத்து கவலையாக இருக்கிறது.
நான் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள என்னுடைய வீட்டில் பிறந்தேன். அப்போது ஆஸ்பத்திரிகள் கி...


