நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை கட்டாயம்
நாடு முழுவதும் நாளை (ஜனவரி 1) முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை கட்டாயமாக்கப்படுகிறது. ஃபாஸ்ட் டேக் பதிவு செய்யாதவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று சுங்கக் கட்டணம் செலுத்தி வந்தன. இதனால் நேர விரயமும், எரிபொருள் செலவும் ஏற்பட்டு வந்தது. இதனை சரிசெய்யும் வகையில் ஃபாஸ்ட் டேக் முறை கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம் வாகனங்கள் ஆன்லைனிலேயே சுங்கக்கட்டணத்தை செலுத்தி விட்டு, சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்லலாம். இத்தகைய ஃபாஸ்ட் டேக் முறையானது ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுவதாகவும், எனவே ஃபாஸ்ட் டேக் பதிவு செய்து, அந்த ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.
இதற்காக சுங்கச்சாவடிகள், ஆன...
