உள்ளாடை போல இனி மாஸ்க் கட்டாயம் அணியனுமாம் – சொல்கிறார் ராதாகிருஷ்ணன்
சென்னையில் எடுக்கப்பட்டு வரும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள், பாதிப்புகள் குறித்து கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் ராயபுரம் மண்டலத்தில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அனைவரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன். கொரானா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து யாரும் அச்சப்பட தேவையில்லை. ஏனென்றால் கடந்த 9 நாட்களாக கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வட சென்னை பகுதிகளில் கொரானா பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் 19 கூடுதல் மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்துள்ளன. அதில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக வந்துள்ளது.
தற்போது பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு உள்ளதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாகத்தான் இருக்கும்.
சென்னைய...

