கொரானா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் பயம் வேண்டாம் – டாக்டர் செளமியா சுவாமிநாதன் தகவல்
கொரானா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் பயம் வேண்டாம் - டாக்டர் செளமியா சுவாமிநாதன் தகவல்
உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளரான மருத்துவர் சவுமியா சாமிநாதன், “கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கொரோனா வைரஸில் இருந்து காத்துக் கொள்வதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் உலக அளவில் 200 நிறுவனங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. அதில் இந்தியாவில் மட்டுமே 8 நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.
இது மட்டுமல்லாமல், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் வெகுஜன பயன்பாட்டுக்கு இலவசமாகவே கிடைக்கும். அதற்கான நிதி திரட்டல் பணிகளும் கூடவே நடைபெற்று வருகிறது” எனக் கூறியுள்ளார்.
74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவிட் 19 தடுப்பு பணிக்காக சிறந்த மருத்துவ ஆலோசனைகளை வழங்கிய சவுமியா சாமிநாதனுக்கு தமிழக அரசு சார்பாக முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்க...
