ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: தமிழக சட்டமன்ற தேர்தல் 2021

மேஜிக் நம்பரை தாண்டி திமுக கூட்டணி முன்னிலை… தொண்டர்கள் உற்சாகம்!

மேஜிக் நம்பரை தாண்டி திமுக கூட்டணி முன்னிலை… தொண்டர்கள் உற்சாகம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மேஜிக் நம்பரை தாண்டி திமுக கூட்டணி முன்னிலை... தொண்டர்கள் உற்சாகம்! தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது. தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்க...
சைக்கிளில் வந்த விஜய்!

சைக்கிளில் வந்த விஜய்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சைக்கிளில் வந்த விஜய்! தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் வாக்குகளை செலுத்தினர். இதையடுத்து நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சைக்கிளில் வந்தார். விஜய் சைக்கிளில் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். விஜய் வாக்களிக்க வந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வை இப்படி குறியீடாக சொல்லியிருக்கிறார் என்று சமூகவலைத்தளத்தில் பேசப்பட்டது. இதனால், சைக்கிளில் வந்த நடிகர் விஜய் ஸ்கூட்டரில் திரும்பிச் சென்றார்....
தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குப்பதிவு: 5 மணிக்குப்பிறகு 8.19 சதவீதம் பதிவு!

தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குப்பதிவு: 5 மணிக்குப்பிறகு 8.19 சதவீதம் பதிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குப்பதிவு: 5 மணிக்குப்பிறகு 8.19 சதவீதம் பதிவு! தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் முழுவதுமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்தார். முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவாகியிருந்தது. 11 நிலவரப்படி 26.29% வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% சதவீதமும், மதியம் 3 மணி நிலவரப்படி 53.35% சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதமும் பதிவாகின. அதன்பின் மொத்தமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவானது. ஐந்து மணிக்குப்பிறகு 8.19 சதவீத வாக்குகள் பதிவாகின....
தமிழகத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்- பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் போலீசார்!

தமிழகத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்- பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் போலீசார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்- பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் போலீசார்! தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (6-ந் தேதி) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,585 பேர் ஆண்கள். 411 பேர் பெண்கள். சட்டமன்ற தேர்தலில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 528 சாவடிகள் பதட்டமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மேற்பார்வையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மையங்களுக்...
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி! சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * தமிழகத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். * வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை வழங்கப்படும். * வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. * தமிழகத்தில் 50% வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். * வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். * 21 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. * பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் உரிய ஆவணத்துடன் வாக்களிக்கலாம். * கொ...
அ.தி.மு.க. வேட்பாளரின் டிரைவர் வீட்டில் ரூ.1 கோடி!

அ.தி.மு.க. வேட்பாளரின் டிரைவர் வீட்டில் ரூ.1 கோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேட்பாளர்களும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணத்தை இடமாற்றம் செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறையும் களமிறங்கியுள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் அரசியல் கட்சியினரின் நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு ஆ...