சாதி பெயரில் அரசின் நிவாரண செய்தி வெளியிட்ட திருவள்ளூர் கலெக்டர் திடீரென பதிவை நீக்கிய மர்மம்!
சாதி பெயரில் அரசின் நிவாரணம் செய்தி வெளியிட்ட திருவள்ளூர் கலெக்டர் திடீரென பதிவை நீக்கிய மர்மம்!
உலகம் முழுதும் கொரானா பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி எல்லா நாட்டு மக்களையும் வீட்டுக்குள் முடக்கி உள்ளது.
தமிழகத்திலும் கொரானா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழக அரசு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் மாவட்டம் தோறும் கலெக்டர் அலுவலகம் மூலமாக செய்யப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில் ஊத்துக்கோட்டை, பேரண்டூர் கிராமத்தில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தின் ஆட்சியாளராக தற்போது பதவியில் இருந்து வருவது மகேஸ்வரி ரவிக்குமார் IAS.
நேற்று முன் தினம் திருவள்ளூர் மாவட்டம் , பேரண்டூர் கிராமத்தில் வழங்கப்பட நிவாரண உதவி பற்றிய தகவலை திருவள்ளூர் ஆட்சியரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில் சில விவரங்களை குறிப்ப...
