வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: நிர்மலா சீதாராமன்

25 ஆண்டுகளில் இந்தியா முன்னணி நாடாக உயரும்- நிர்மலா சீதாராமன்!

25 ஆண்டுகளில் இந்தியா முன்னணி நாடாக உயரும்- நிர்மலா சீதாராமன்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில், தொழிலதிபர்களுடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- கடந்த ஆண்டு பட்ஜெட்டை போலவே இந்த ஆண்டு பட்ஜெட்டும் மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உள்கட்டமைப்பு திட்டமிடல், முதலீடு ஆகியவற்றுக்கு பிரதமரின் கதிசக்தி திட்டம் வழிகாட்டும். உள்கட்டமைப்பு துறையில் பெரிய அளவில் முதலீடு செய்வது, பொருளாதாரம் மீண்டு வருவதற்கு எப்போதும் அவசியம். அதே சமயத்தில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை முன்னணி நாடாக உயர்த்துவதற்கு பாடுபட்டு வருகிறோம். அதற்கு மின்னணு ரீதியாக இந்தியா தயாராகி வருகிறது. நாட்டில் மின்னணு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, 75 டிஜிட்டல் வங்கிகள் அமைக்கப்படும். அத்துடன், ரிசர்வ் வங்கி...
கொரோனா காலத்திலும் இந்திய கோடீசுவரர்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு – நிர்மலா சீதாராமன்!

கொரோனா காலத்திலும் இந்திய கோடீசுவரர்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு – நிர்மலா சீதாராமன்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா காலத்திலும் இந்திய கோடீசுவரர்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு - நிர்மலா சீதாராமன்! உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தில் பெருத்த அடியை ஏற்படுத்தி இருக்கிறது. வேலை இழப்பு, வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளால் வறுமையின் பிடிக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். அதேநேரம் இந்த நெருக்கடி காலத்திலும் கணிசமான செல்வந்தர்கள் தங்கள் வளத்தைப் பெருக்கி வருகின்றனர். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்திய செல்வந்தர்கள் மாறியிருக்கின்றனர். அந்தவகையில், கடந்த 2018-ம் நிதியாண்டில் ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல் வருவாய் ஈட்டியவர்களின் எண்ணிக்கை வெறும் 77 ஆக இருந்தது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த 2020-ம் நிதியாண்டில் இது 141 ஆகவும், 2021-ம் நித...
பசியில் இருக்கும் ஏழைகளுக்கு ஒன்றுக்கும் உதவாத நிதி மந்திரி அறிவிப்பு – ப.சிதம்பரம் காட்டம்

பசியில் இருக்கும் ஏழைகளுக்கு ஒன்றுக்கும் உதவாத நிதி மந்திரி அறிவிப்பு – ப.சிதம்பரம் காட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பசியில் இருக்கும் ஏழைகளுக்கு ஒன்றுக்கும் உதவாத நிதி மந்திரி அறிவிப்பு - ப.சிதம்பரம் காட்டம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் 20 லட்சம் கோடி அறிவிப்பு குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- 'நாடு முழுவதும் பசி மற்றும் ஏழ்மையில் இருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு நிதி மந்திரியின் பேச்சில் எதுவும் இல்லை பேரழிவுகளுக்கு உள்ளான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சென்றனர். பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் நிதிமந்திரியின் பேச்சில் எதுவும் இல்லை. தினம் தினம் உழைப்பவர்களுக்கு இது ஒரு மரண அடியாகும். அடித்தட்டு நிலையில் உள்ள மக்களுக்கு பணத்தை கொண்டு சேர்க்க எந்த வழிகளும் உருவாக்கப்படவில்லை. 13 கோடி குடும்பங்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளன. ...
5 லட்சம் கோடியில் புதிய “தன்னிறைவு இந்தியா” திட்டம் அறிவிப்பு – நிர்மலா சீத்தாராமன்

5 லட்சம் கோடியில் புதிய “தன்னிறைவு இந்தியா” திட்டம் அறிவிப்பு – நிர்மலா சீத்தாராமன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    5 லட்சம் கோடியில் புதிய "தன்னிறைவு இந்தியா" திட்டம் அறிவிப்பு - நிர்மலா சீத்தாராமன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் பேசும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் திட்டங்கள் குறித்த விவரங்களை அமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார் இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அவர் கூறுகையில்:- இந்தியாவின் வளர்ச்சி பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மனித வளம், தேவை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 5 காரணிகளை கொண்டதாகும். பிரதமர் மோடி...
ஊரடங்கு காலத்தில் யாரும் பசி,பட்டினியாக இருக்க கூடாது என்பதற்காக 1.70 லட்சம் கோடி நிதி – நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு

ஊரடங்கு காலத்தில் யாரும் பசி,பட்டினியாக இருக்க கூடாது என்பதற்காக 1.70 லட்சம் கோடி நிதி – நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு காலத்தில் யாரும் பசி,பட்டினியாக இருக்க கூடாது என்பதற்காக 1.70 லட்சம் கோடி நிதி - நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்றுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் பசியால் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம், உணவில்லாமல் யாரும் பாதிக்கப்படாத நிலை ஏற்படும். இந்த திட்டங்களின் அடிப்படையில், பொரு...
ரூ.2000 நோட்டு செல்லுமா – நிர்மலா சீதாராமன் விளக்கம்

ரூ.2000 நோட்டு செல்லுமா – நிர்மலா சீதாராமன் விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மோடி அரசு முதல் முறையாக பதவி ஏற்றதும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பதிலாக புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஏ.டி.எம்.களில் இந்த நோட்டுகளே அதிக அளவில் கிடைத்து வந்தன. ஆனால், நாளடைவில் இதை அச்சடிப்பது குறைக்கப்பட்டது. 2 ஆயிரம் நோட்டுகள் கிடைத்த பொதுமக்கள், சில்லறை கிடைக்காமல் தவித்தனர். சில்லறைக்கு வங்கிகளையே அணுகினர். இதனால், ஏ.டி.எம்.களில் இனிமேல் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வைக்கப்போவதில்லை என்று வங்கிகள் அறிவித்தன. இருப்பினும், அந்த நோட்டுகள் தொடர்ந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதே சமயத்தில், வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வழங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டதாக தகவல் பரவியது. ...
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – நிர்மலா சீத்தாராமன்

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – நிர்மலா சீத்தாராமன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழர்களின் தொன்மையை உலகுக்கு விளக்கும் வகையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியபோது கூறியது; சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு முக்கியமான நகரங்கல் தேஜஸ் ரயில் மூலம் இணைக்கப்படும். சுற்றுலா துறையை மேம்படுத்த ரூ. 2500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகம், அரியானா, உத்தர பிரதேசம், குஜராத் உள்பட 5 மாநிலங்களில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்....
பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தனிநபர் வருமானம் 5 லட்சம் ரூபாய் இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. 5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக வரி குறைப்பு. 7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக வரி குறைக்கப்பட்டு உள்ளது. 10 லட்சம் முதல் 12,5 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால்  30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வரி குறைப்பு 12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரி வருமானம் இருந்தால் 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 30 சதவீதம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த வருமான வரி குறைப்பு நடவட...
நிதி அமைச்சர் ஆனதும் துறை ஊழியர்களுக்கு அல்வா கிண்டிக் கொடுத்த நிர்மலா சீதாராமன்..!

நிதி அமைச்சர் ஆனதும் துறை ஊழியர்களுக்கு அல்வா கிண்டிக் கொடுத்த நிர்மலா சீதாராமன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பட்ஜெட்டுக்காக முதன்முறையாக அல்வா கிண்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..! பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு தயாரித்து, இந்த பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து 2019-20ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை அச்சடிக்கும் பணி தொடங்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் மத்திய நிதி மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் இதுவாகும். இதற்காக தான் நிர்மலா சீத்தாராமன் அல்வா கிண்டினார்....