1/2 கி.மீ.நீளத்துக்கு தி.நகரில் பயணிகள் நடை மேம்பாலம் !
தி.நகர் ரெயில் நிலையம் - பஸ் நிலையம் இணைக்கும் வகையில் பயணிகள் நடை மேம்பால பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையில் மிகப்பெரிய வர்த்தக மையமாக தி.நகர் உள்ளது.இங்கு ஜவுளி, நகை,மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க மாம்பலம் ரெயில் நிலையம் வழியாக தினமும் பல லட்சம் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு உள்ள ரெங்கநாதன் தெரு,மேட்லி சாலை,உஸ்மான் ரோடு மார்க்கெட் தெரு என அனைத்திலும் திருவிழா கூட்டம் போல் மக்கள் தினமும் அலைமோதி வருகின்றார்கள்.
புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தி.நகருக்கு ஏராளமானோர் வருகின்றனர். இந்த நிலையில் பயணிகள், பொதுமக்கள் நெரிசலில் சிக்காமல் செல்ல வசதியாக மாநகராட்சி புதிய திட்டம் தீட்டியது.
இதற்காக தி.நகர் ரெயில்நிலையம்-பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் 1/2 கி.மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட பயணிகள் நடை மேம்பாலம் ரூ. 30 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட...
