சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: பா.ஜனதா

உள்ளாட்சி தேர்தல்- தேசிய கட்சிகளுக்கு தண்ணீர் காட்டும் மாநில கட்சிகள்!

உள்ளாட்சி தேர்தல்- தேசிய கட்சிகளுக்கு தண்ணீர் காட்டும் மாநில கட்சிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மிக நீண்ட பாரம்பரியம் மிக்க தேசிய கட்சியான காங்கிரசுக்கும், பலம் வாய்ந்த ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜனதாவுக்கும் தமிழகத்தில் மாநில கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் நேரங்களில் தண்ணீர் காட்டி வருகின்றன. இதனால் காங்கிரசும், பா.ஜனதாவும் விழிபிதுங்கி தவிக்கின்றன. பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் அப்படி என்றால் இப்போது உள்ளாட்சி தேர்தலிலும் படாதபாடு படுகின்றன. 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் காங்கிரசுக்கு தி.மு.க. 14 இடங்களை கொடுத்தது. அப்போது மொத்த வார்டுகள் 155 தான். இப்போது வார்டு எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் காங்கிரசுக்கு ‘அந்த 14’ மட்டும்தான். வேண்டுமானால் மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 இடங்கள் தரலாம் என்று கூறுவதாக கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் சட்டமன்ற தொகுதிக்கு 2 வீதம் 21 சட்டமன்றத்துக்கும் 42 தொகுத...
அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை!

அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. மனு தாக்கல் முடிவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. ஆனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்கள் தொடர்பாக மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது அந்தந்த மாவட்டங்களில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் பேசி முடிவு செய்யும்படி கூறியுள்ளார். இதையடுத்து மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் காங்கிரசுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலே இடங்கள் ஒதுக்குவதால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி நிலவுக...
மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து!

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து! தமிழக பா.ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்தார். மணிப்பூர் கவர்னராக 24.7.2019-ல் நஜ்மா ஹெப்துல்லா நியமிக்கப்பட்டார். கடந்த 10-ந்தேதி முதல் அவர் விடுப்பில் சென்றார். அதைத்தொடர்ந்து சிக்கிம் மாநில கவர்னர் கங்கா பிரசாத் மணிப்பூர் மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் இல.கணேசன்  மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இல.கணேசன்  தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தனது அண்ணனின் பராமரிப்பிலேயே வாழ்ந்து வருகிறார். இளம் வயதிலேயே ஆர். எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பற்று கொண்டவர். அதனால் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியராக பணியாற்றினார்...
மக்களின் கவனத்தை திசை திருப்பவே அயோத்தி பிரச்சினை- பா.ஜனதா மீது மாயாவதி குற்றச்சாட்டு

மக்களின் கவனத்தை திசை திருப்பவே அயோத்தி பிரச்சினை- பா.ஜனதா மீது மாயாவதி குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ராமர் கோவில் கட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து அமைப்புகள் சார்பில் அயோத்தியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விசுவ இந்து பரிஷத் சார்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாநாடும் நடக்கிறது. இதுபற்றி பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- இப்பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் சில அமைப்புகள் அயோத்தியில் கோவில் கட்ட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இது தவறான அணுகுமுறை. கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை அவர்கள் பொறுத்திருக்க வேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா பல்வேறு விஷயங்களிலும் தோல்வி கண்டு விட்டது. அதை மறைக்கவும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் தற்போது ராமர் கோவில் விவகாரத்தை மீண்டும் இவர்கள் கையில் எடுத்து உள்ளனர். இதில், நிச்சயமாக அரசியல் தந்திரம் தவிர வேறு எதுவும் கிடையாத...