தூங்கி எழுந்ததும் ஊரடங்கு உத்தரவு போட்டீர்களா… அடித்தட்டு மக்களை வதைக்கிற அரசு நிலைத்ததில்லை – மோடிக்கு காட்டமாக கடிதம் எழுதிய கமல்
பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பணமதிப்பிழப்பு பாணியில் 4 மணி நேர அவகாசத்தில் உத்தவிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களான அடித்தட்டு மக்களின் நலைனை பிரதமர் மோடி கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு காட்டமான கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும் அதே சமயம் நாட்டின் பாதிக்கப்பட்ட குடிமகனாகவும் எழுதுகிறேன். முதலில் உங்களுக்கு கடந்த 23-ஆம் தேதி கடிதம் எழுதினேன். அதில் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டேன். இதற்கு அடுத்த நாளே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பின் போது எப்படி கால அவகாசம் கொடுக்கப்படவி...
