நாட்டின் சொத்துகள் மோடியின் நண்பர்களுக்கு தாரை வார்ப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
நாட்டின் சொத்துகள் மோடியின் நண்பர்களுக்கு தாரை வார்ப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காணொலி காட்சி மூலம் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மோடி அரசு, பொருளாதாரத்தை மிக மோசமாக கையாளுகிறது. அதனால் நாடு சிக்கலான காலகட்டத்தில் இருக்கிறது. பெரிய எதிர்க்கட்சி என்ற முறையில், இந்த சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய தார்மிக கடமை, காங்கிரசுக்கு இருக்கிறது.
70 ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட சொத்துகள், மோடிஜியின் சில குறிப்பிட்ட நண்பர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது.
தனியார்மயமாக்கத்துக்கு காங்கிரஸ் எதிரி அல்ல. ஆனால், காங்கிரசின் தனியார்மயமாக்கல் திட்டத்தில் ஒரு ‘லாஜிக்’ இருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களை காங்கிரஸ் அரசு தனியார்மயம் ஆக்கியது இல...



