விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “டைகர்”
விக்ரம் பிரபு நடிப்பில் இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “டைகர்”
நடிகர் விக்ரம் பிரபு, உலகளாவிய பார்வையாளர்கள் ரசிக்கும் வகையிலான திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் உறுதியாக செயல்பட்டு, தனது ஒவ்வொரு தேர்விலும், அவரது திரைப்படங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் இயக்குநர் முத்தையா இயக்கிய ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படத்தில் ஒரு கிராமிய பாத்திரத்தில், முழுதாக தன்னை மாற்றிக்கொண்டு, தனது திறமையை நிரூபித்திருந்தார்.
இந்த முறை இயக்குநர் முத்தையா, இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபுவின் வரவிருக்கும் திரைப்படமான “டைகர்” படத்திற்கு கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார்.
இப்படத்தினை M Studios நிறுவனம் Open Screen Pictures உடன் இணைந்து தயாரிக்கின்றது.
இயக்குனர் கார்த்தி படம் குறித்து கூறுகையில்..,
...

