உத்தர பிரதேசத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு!
உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள தில்குஷா பகுதியில் அமைந்தள்ள ராணுவ வளாகத்திற்கு வெளியே ஏராமானோர் குடிசைகளில் வசித்து வந்தனர்.
நேற்றிரவு தொடர் கன மழை காரணமாக ராணுவ வளாக சுவர் இடிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக, காவல்துறை இணை ஆணையர் பியூஷ் மோர்டியா தெரிவித்தார்.
அதிகாலை 3 மணியளவில் ஒன்பது உடல்கள் இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேபோல் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலக டுவிட்டர் பதிவில...