புதன்கிழமை, மே 15
Shadow

Tag: கிருஷ்ணகிரி இன்னும் கிரீன் தான்

கிருஷ்ணகிரி இன்னும் கிரீன் தான் – பீலா ராஜேஷ்

கிருஷ்ணகிரி இன்னும் கிரீன் தான் – பீலா ராஜேஷ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியை அடுத்துள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த 67 வயது முதியவர் உள்பட 4 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம், புட்டபர்த்தி கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு காரில் வந்தனர். மாவட்ட எல்லையில் அவர்களுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 67 வயது முதியவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது . இந்த தகவல் அம்மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழகத்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஆரஞ்சு மண்டலமாக மாறியதாக கூறப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி இன்னும் பச்சை மண்டலமாகத்தான் திகழ்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில் ‘‘புட்டபர்த்தியிலிருந்து திரும்பிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சே...