திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

கிருஷ்ணகிரி இன்னும் கிரீன் தான் – பீலா ராஜேஷ்

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியை அடுத்துள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த 67 வயது முதியவர் உள்பட 4 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம், புட்டபர்த்தி கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு காரில் வந்தனர். மாவட்ட எல்லையில் அவர்களுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 67 வயது முதியவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது . இந்த தகவல் அம்மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழகத்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஆரஞ்சு மண்டலமாக மாறியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி இன்னும் பச்சை மண்டலமாகத்தான் திகழ்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில் ‘‘புட்டபர்த்தியிலிருந்து திரும்பிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் சேலம் சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவர் சேலம் மாவட்ட பாதிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கிருஷ்ணகிரி இன்னும் பச்சை மண்டலமாகவே திகழ்கிறது. கொரானா பரவல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை தொற்று பரவாத ஒரே மாவட்டம் கிருஷ்ணகிரி மட்டுமே.

924 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன