சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை விசாரிக்க வந்த அதிகாரியை தனிமை முகாமில் அடைத்த அரசு!
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை விசாரிக்க வந்த பீகார் போலீஸ் அதிகாரிகளை கொரானா தனிமை முகாமில் அடைத்ததால் பெரும் பரபரப்பு!
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த தற்கொலை தொடர்பாக மும்பை, பாட்னா என இரண்டு இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்தின் காதலி உள்பட பலரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்த்தின் தந்தை கே.கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்தார்.
இதையடுத்து, வழக்குதொடர்பான விசாரணைக்கா...