திரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்
திரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் 30 சதவீத சம்பளத்தையும், பைனான்சியர்கள் 3 மாத வட்டியையும் விட்டுக்கொடுங்கள் - பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள்!
அன்புடையீர் வணக்கம்.
கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் பல்துறைகளும் முற்றிலும் முடங்கிக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட துறை முற்றிலும் ஸ்தம்பித்து அந்தந்தப் பணிகள் அப்படியே முடங்கிவிட்டது.
படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த படங்கள், படப்படிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்ற படங்கள், படவேலைகள் முடிந்து வெளியீட்டு தருவாயில் இருந்த படங்கள் என திட்டமிட்ட அனைத்து வேலைகளும் அப்படியே சிதைந்து விட்டது. இந்த ந...