இடப் பிரச்சினை…. அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா? அடம் பிடிக்கும் இளையராஜாவா?
இடப் பிரச்சினை.... அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா?
அடம் பிடிக்கும் இளையராஜாவா?
பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 45 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்கு சொந்தமான இடத்தில் தனது இசைக்கூடத்தை வைத்து இசையமைத்து வருகிறார். பல நூறு ஹிட் பாடல்கள் இங்கிருந்து தான் பதிவு செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் எல்.வி.பிரசாத் இருந்த போது இந்த இடத்திற்கு எந்த சிக்கலும் வரவில்லை. அவருக்கு பின் அவர் மகன்கள், அதன் பின் பேரன்கள் நிர்வாகத்தை கையில் எடுத்ததும் ஸ்டுடியோவில் பல மாற்றங்கள் செய்தனர்.
ஸ்டுடியோவில் இருந்து நீண்டகாலமாக வாடகைக்கு இருக்கும் இளையராஜாவை காலி செய்யும்படி நிர்வாகம் சார்பில் அழுத்தம் ...