பேரரிவாளன் பரோல் மனு மீது முடிவெடுக்காமல் கும்பகர்ணன் போல தூங்குகிறதா அரசு -கோர்ட் அதிருப்தி
பேரறிவாளன் பரோல் வழக்கில் முடிவெடுக்காமல் கும்பகர்ணன் போல அரசு தூங்குகிறதா... கோர்ட் கடும் அதிருப்தி!
பேரறிவாளனுக்கு 90 நாள் பரோல் வழங்கக்கோரி அவரின் தாய் தொடர்ந்த வழக்கில் அரசு உரிய நேரத்தில் கடமையாற்றமல் கும்பகர்ணன் போல் தூங்கிக்கொண்டு உள்ளீர்களா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று பாதிக்கு...