சீனாவின் அத்துமீறல் குறித்து பேச 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மோடி அழைப்பு!
லடாக் எல்லை மோதல் சீனாவின் அத்துமீறல் குறித்து பேச 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மோடி அழைப்பு!
இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை இப்போது பூதாகரமக வெடித்துள்ளது. எல்லையில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல் சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எல்லை மோதலைத் தொடர்ந்து பாதுகாப்...
