இளம் நிர்வாகிகளை அதிக அளவில் தேர்தலில் களம் இறக்க தி.மு.க முடிவு!
சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக ஐபேக் நிறுவனத்தினர் குக்கிராமங்களுக்கு சென்று அங்குள்ள கள நிலவரங்களை அறிந்து கட்சி மேலிடத்துக்கு தகவல் அளிக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் கட்சியினர், முன்னணி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதி அளிப்பதோடு அதை தேர்தல் அறிக்கையிலும் சேர்க்க முடிவு செய்துள்ளார்கள்.
கடந்த வாரம் தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி என்ற கிராமத்திற்கு சென்ற கனிமொழி எம்.பி. அந்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை சந்தித்து உரையாடி இருக்கிறார்.
கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அந்த கிராமத்துக்கு சென்றிருக்கிறார். அங்கேயே தங்கி இருந்து கட்சி பணிகளையும் செய்து இருக்கிறார். இதை அங்குள்ளவர்கள் நினைவு கூர்ந்து இருக்கிறார்கள்.
...

