லண்டனில் இருந்து நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா? நாளை தீர்ப்பு!
வங்கிகளில் ரூ 9,000 கோடி கடன் பெற்று தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவை லண்டனிலிருந்து நாடு கடத்தும் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.
இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் ரூ 9,000 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கடன் மோசடி தொடர்பாக சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்...
