ரூ.5 கோடி மோசடி வழக்கு – நடிகர் விமல் விளக்கம்!
நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்காக ரூ.5 கோடி கடன் பெற்றதாகவும், அந்த கடனை திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டதாகவும், சினிமா தயாரிப்பாளர் கோபி என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதற்கு பதிலடியாக நடிகர் விமல் கூடுதல் கமிஷனர் கண்ணனிடம் அளித்துள்ள புகார் மனுவில், கோபி தற்போது தன்மீது கொடுத்துள்ள ரூ.5 கோடி மோசடியில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
எனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும், எனது புகழை கெடுக்கும் நோக்கத்திலும் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் விமல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மன்னர் வகையறா படத்தை இயக்கிய பூபதி பாண்டியன் பூபதி பாண்டியன் என்பவரை அறிமுகம் செய்தார்.
சிங்காரவேலன்தான், கோபிக்கு பணம் கொடுக்க வேண்டும். எனக்கும்...