உருவக்கேலிக்கு ஆளான கர்நாடக விவசாயியிடம் மன்னிப்பு கோரி, காரை டெலிவரி செய்த மஹேந்திரா!
கர்நாடக மாநிலத்தில் கார் வாங்கும் ஆர்வத்துடன் ஷோ ரூமுக்கு சென்ற விவசாயி ஒருவரை அங்கு பணியிலிருந்து விற்பனை பிரதிநிதிகள் அவரை பார்த்து உருவக் கேலி செய்துள்ளனர்.
இந்த செய்தி தேசிய அளவில் பரவியது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கார் நிறுவனமான மஹேந்திரா நிறுவனம் இதற்கு அவரிடம் கடிதம் மூலம் வருத்தத்தை தெரிவித்துள்ளது.
அதோடு அவருக்கு பொலேரோ காரையும் டெலிவரி செய்துள்ளது.
தும்கூர் மாவட்டத்தில் உள்ள ராமன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கெம்ப கவுடா. விவசாயியான இவர் கார் வாங்கும் நோக்கத்தில் அங்குள்ள மஹேந்திரா கார் விற்பனை ஷோ ரூமுக்கு சென்றுள்ளார். அவர் தனக்கு பிடித்தமான காரின் விலையையும் கேட்டுள்ளார்.
ஆனால் அந்த ஷோ ரூமிலிருந்து பிரதிநிதிகள், ‘இந்த கார் விலை 10 லட்சம் ரூபாய்; உன் பாக்கெட்டில் 10 ரூபாய் இருக்குமா?’ என ஏளனமாக பேசி அவரை கேலி செய்துள்ளனர்.
&nb...

