ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது! பாஜக திரைமறைவு வேலையா?
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் தனது ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
முதல்வராக உள்ள கமல்நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இப்போது ஆட்சி பறிபோகும் நிலைக்கு காரணமாகி உள்ளது.
ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவருடைய ஆதரவாளர்களாக கருதப்படும் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென கட்சி தலைமையிடம் தெரிவிக்காமல் வெளியேறி, பெங்களூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு வந்தார்கள்.
இதனால் ம.பி. அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கமல்நாத் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக கூறப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் சோனியா காந்திக்கு ஜோதிராதித்யா சிந்தியா கடி...

