புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Dr thirumavalavan

இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் – தொல்.திருமாவளவன் வாழ்த்து

இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் – தொல்.திருமாவளவன் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  *இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும்.* *-விசிக தலைவர் . தொல் திருமாவளவன் MP.* இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, இந்த ஆண்டு கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடைபெற்றது. கோவை மற்றும் மதுரையில் ஒரு நாளும், சென்னையில் 8 நாட்களும் மிகவும் கோலாகலமான எளிய உழைக்கும் மக்களின் இசைத்திருவிழாவாக இது நடைபெற்று முடிந்திருக்கிறது. முத்தாய்ப்பாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் MP, திமுக பார...
முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் எம்பி திடீர் கோரிக்கை!

முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் எம்பி திடீர் கோரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குங்கள் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பின்வருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்: “ கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவெங்கிலுமுள்ள சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து உச்சநீதிமன்றம் தானே முன்வந்து கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது (Suo Motu writ Petition ( C ) No.1 /2020). நேற்று (07.05.2021) அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முக்கியமான சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் நான்காவது அம்சமாக, ”ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பரோல் வழங்கப்பட்ட சிறைவாசிகளுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “we dire...
படித்தவர்கள் யார்? அன்புமணிக்கு கிளாஸ் எடுத்த திருமா!

படித்தவர்கள் யார்? அன்புமணிக்கு கிளாஸ் எடுத்த திருமா!

HOME SLIDER, NEWS, politics
  அரக்கோணத்தில் நடந்த சாதிவெறிப் படுகொலைகளையொட்டிய விவாதங்களில் ஒன்றாக, திருமாவளவன் மீது படித்த இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தார் பாமக இளைரணித்தலைவர் அன்புமணி. அதற்கு எதிர்வினையாக, என் படிப்பு இது, நான் திருமாவளவனோடு நிற்கிறேன் என்று ஏராளமான பட்டதாரிகள் சமூகவலைதளங்களில் பதிவிட்டார்கள். இந்நிலையில்,நேற்று (ஏப்ரல் 11) நடந்த நேரலை நிகழ்வொன்றில் திருமாவளவன் ஆற்றிய உரை….. திருமாவளவனை படித்த இளைஞர்கள் நம்புவதில்லை என்று அன்புமணி ராமதாஸ் என் மீது தனிநபர் விமர்சனம் வைத்துள்ளார். அவர் என்னைக் கொச்சைப்படுவதாக எண்ணிக்கொண்டு படிப்பதற்கு கல்வியை நுகர வாய்ப்பில்லாத இளைஞர்களை கொச்சைப்படுத்துகிறார். படித்தவர்கள் படிக்காதவர்களை விட மேலானவர்கள் என்பதைப் போன்று உளவியலின் அடிப்படையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். படித்தவர்கள் ஆதரித்தால் தான் அவர்கள் உயர்ந்தவர்கள். படிக...
தமிழ்நாட்டு மருத்துவப் பட்டியலில் இடம் பெற்ற தெலங்கானாவைச் சேர்ந்த 34 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – திருமாவளவன்

தமிழ்நாட்டு மருத்துவப் பட்டியலில் இடம் பெற்ற தெலங்கானாவைச் சேர்ந்த 34 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – திருமாவளவன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ்நாட்டுப் பட்டியலில் இடம் பெற்ற தெலங்கானாவைச் சேர்ந்த 34 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெலங்கானாவைச் சேர்ந்த 34 பேர் தமிழ்நாட்டுப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மோசடியாக குடியிருப்புச் சான்றிதழ் பெற்று இப்படி இடம் பெற்றிருக்கிறார்களா? என்ற ஐயம் எழுந்துள்ளது. அவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாணவர்கள் 34 பேரையும் இனி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். தமிழக மாணவர்களின் மருத்துவப் படி...