வெடிகுண்டு தயாரித்த 6 பேர் கைது!
வில்லியனூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வாலிபரை கொல்ல வெடிகுண்டு தயாரித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர் அருகே அரசூர் காலனியில் ஒரு வெட்டவெளி பகுதியில் ஒரு கும்பல் வெடிகுண்டு தயாரிப்பதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரித்த 6 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் வில்லியனூர் கோபாலன் கடையை சேர்ந்த குமார் என்ற கலைக்குமார் (வயது22), சதீஷ்(21), சுரேஷ்(21), தீனா என்ற யுவராஜ்(21), சதீஷ்குமார் (23) மற்றும் வாழப்பட்டாம் பாளையத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.
குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்த...
