சத்தியமங்கலம் அருகே திடீர் என வயல்வெளியில் இறங்கிய ஹெலிகாப்டர்
பெங்களூரிலிருந்து பாரத்-ஷீலா என்ற கணவன் மனைவியை ஏற்றிக்கொண்டு கேப்டன் ஜஸ்பால் கேரளா மாநிலம் கொச்சின் நோக்கி ஹெலிகாப்டரை இயக்கி உள்ளார்,
உடன் இன்ஜினியர் அங்கித் சிங் என நான்கு பேருடன் பெங்களுரில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் புறப்பட்டு உள்ளது
ஹெலிகாப்டர், ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி வழியாக வானில் வந்த போது அத்தியூர் என்ற இடத்தில் காலை 11-15 மணியளவில் திடீர் என வயல்வெளியில் தரை இறங்கியது
முன்னதாக, கடம்பூர் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் வானில் இருந்து தாழ்வான பகுதியில் பறந்து சென்றதை அப்பகுதியினர் வீடியோ எடுத்து உள்ளனர்
ஹெலிகாப்டர் தரை இறங்கியதை அறிந்த கடம்பூர் மலைப்பகுதியை பொதுமக்கள் ஹெலிகாப்டரை காண திரண்டனர், மேலும் சிறுவர்கள், இளைஞர்கள் ஹெலிகாப்டரை முன்பு நின்று ஆச்சரியத்தில் போட்டோ மற்றும் செல்பி எடுத்து கொண்டனர்.
பனிமூட்டம் காரணமாக கடம்பூர் அருகேயுள்ள அத்தியூர...
