
பெங்களூரிலிருந்து பாரத்-ஷீலா என்ற கணவன் மனைவியை ஏற்றிக்கொண்டு கேப்டன் ஜஸ்பால் கேரளா மாநிலம் கொச்சின் நோக்கி ஹெலிகாப்டரை இயக்கி உள்ளார்,
உடன் இன்ஜினியர் அங்கித் சிங் என நான்கு பேருடன் பெங்களுரில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் புறப்பட்டு உள்ளது
ஹெலிகாப்டர், ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி வழியாக வானில் வந்த போது அத்தியூர் என்ற இடத்தில் காலை 11-15 மணியளவில் திடீர் என வயல்வெளியில் தரை இறங்கியது
முன்னதாக, கடம்பூர் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் வானில் இருந்து தாழ்வான பகுதியில் பறந்து சென்றதை அப்பகுதியினர் வீடியோ எடுத்து உள்ளனர்
சமீபத்தில்தான் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து பலர் பலியான சோகம் இன்னமும் மக்களிடையே இருப்பதால் ஹெலிகாப்டர் தரை இறங்கிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுட்தியது.
இதே போல சில ஆண்டுகளுக்கு முன் பிரபல லூலு நிறுவன உரிமையாளர் சென்ற தனியார் ஹெலிகாப்டரும் அவரசமாக வயல்வெளியில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

