கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்
கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்... சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம் 3.5/5
விவசாயிகள் படும் வேதனை பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் எத்தனை படங்கள் வந்தாலும் அதில் எப்போதும் இந்த கடைசி விவசாயி தனியாக தெரியும் அளவுக்கு ஒரு அழுத்தமான வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.
"அழகென்ற சொல்லுக்கு முருகா" என்ற பழைய பாடலுடன் டைட்டில் தொடங்கும் போதே நம்மையும் அறியாமல் படத்திற்குள் நாம் பயணப்படுகிறோம்.
அப்படி டைட்டிலில் தொடங்கி கடைசி எண்ட் கார்டு போடுவதுவரை காட்சிகளில் இருந்து நம்மை அகலவிடாமல் பார்த்துக் கொண்டது மாயாண்டியாக வாழ்ந்த நல்லாண்டி நடிப்பும் ஒளிப்பதிவும் அளவான வசனங்களும்தான்.
கதைப்படி கிராமத்தில் விவசாயியாக இருப்பவர் மாயாண்டி வயதான காலத்திலும் தனது வயலில் விவசாயம் பார்க்கிறார்.
அந்த ஊரில் விவசாய நிலங்களை குறைந்த விலை...