கஞ்சாவை பக்கத்து வீட்டு காம்பவுண்டில் கஞ்சா விதைத்து பூச்செடி போல வளர்த்த கில்லாடி வாலிபர்!
கஞ்சாவை பக்கத்து வீட்டு காம்பவுண்டில் கஞ்சா விதைத்து பூச்செடி போல வளர்த்த கில்லாடி வாலிபர்!
கஞ்சா கிடைக்காத காரணத்தால் கஞ்சாவை பக்கத்து வீட்டு காம்பவுண்டில் நட்டு வைத்து செடியாக வளர்த்த கில்லாடி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாநகர நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தனம்பாளையம் பகுதியில் கஞ்சா செடி வளர்ந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவல் அடிப்படையில் நல்லூர் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, முத்தம்பாளையம், வாய்க்கால் மேடு பகுதியிலிருந்து செவந்தாம்பாளையம் செல்லும் வழியில் உள்ள ஒரு பனியன் கம்பெனி ஹாஸ்டலில் பூச்செடிளுக்கு நடுவில் கஞ்சா செடி வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த விடுதியில் இருந்த 8 நபர்களிடம் போலீசார் விசாரித்தனர்
அப்போது ஹாஸ்டலில் வசிக்காத வெளி நபர் ஒருவர் சம்பந்தமே இல்லாமல் வந்து பூ...
