’வாழ்’ கோடங்கி திரை விமர்சனம்
’வாழ்’ திரை விமர்சனம்
மனித வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஒவ்வொரு மனிதனும் தினம் தினம் போராடிக்கொண்டே வாழ்கிறான்.
அப்படி ஒரு மிஷின் வாழ்க்கையில் வாழும் கதை நாயகன் ப்ரதீப் ஒரு நாள் அவரே எதிர்ப்பார்க்காத ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் அவர் சந்தித்த மக்கள், இடங்கள், அனுபவங்களே இப்படத்தின் வாழ் பட கதை.
அருவி மூலம் இப்படியும்கதை சொல்ல முடியும் என தமிழ் திரையுலகைதிரும்பிப்பார்க்க வைத்த இயக்குனர் அருண் பிரபுவின் அடுத்த படைப்புதான் இந்த வாழ்.
சிவகார்த்திகேயன் படத்தைதயாரிக்க முன் வந்த போதே ஒரு எதிர் பார்ப்பு இருந்தது.
உலக சினிமாக்களில் இது போன்ற ட்ராவல் கதைகள் நிறைய வந்துள்ளது.
அதேபோல் ஒரு ட்ராவல் கதை என்றாலும் அதை நம் தமிழுக்கு ஏற்றது போல் மாற்றி நமக்கு காட்டிய விதம் நன்று. படத்தின் நாயகன் ப்ரதீப் கண்டிப்பாக வரவேற்க கூடிய டேலண்ட், அவரின் கதாபாத்திரத்தை அருமையா...