சிறுநீர் கழித்ததாக கூறப்படும் மாணவர் புகாரில் உண்மையில்லை -சென்னை காவல்துறை
police-attack
முக கவசம் அணியவில்லை என்பதால் தன்னை போலீசார் அடித்து துன்புறுத்தியதாகவும்,
முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் சட்ட கல்லூரி மாணவர் புகார் அளித்திருந்த நிலையில்,
இந்த புகாரில் உண்மையில்லை என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் (22).
இவர் தரமணியில் உள்ள சட்டப்பல்கலைக்கழகத்தில் 5ம் ஆண்டு படித்து வருகிறது.
கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலையும் அவர் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து ரஹீம் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் முகக் கவசம் அணியவில்லை என்பதால் போலீசார் ரஹீமை தடுத்து நிறுத்தியதாகவும்,
இதை தொடர்ந்து இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தன்னை ந...
