பா.ஜ.க.வினர் அதிக அளவில் போலி செய்திகளை பரப்புகின்றனர் – பிரகாஷ் ராஜ்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ‘போலி’ செய்தியால் ஏற்படும் தாக்கம் மற்றும் சவால்கள் என்கிற தலைப்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
போலி செய்தி என் மீது நிறைய பேசப்பட்டது. சமுதாயத்தில் போலி செய்தி அதிக அளவில் பரவி வருகிறது. இதுபோன்ற செய்திகளை நம்பக்கூடிய மனநிலையில் உள்ளவர்கள் அதிகளவில் இருக்கின்றனர். மிகவும் சரியான ஒருங்கிணைப்பில் தவறான தகவலை பரப்புகின்றனர். மேலும் இதனை ஒரு ஆயுதமாக சிலர் பயன்படுத்தி வருகிறார்கள்.
பெரும்பாலான அரசியல் கட்சியினர் போலி செய்திகளை பரப்புகின்றனர். குறிப்பாக பா.ஜ.க. அதிக அளவில் போலி செய்திகளை பரப்புகின்றது.
இவ்வாறு பேசினார்.
பின்னர் பிரகாஷ்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த 4 1/2 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் போலியான செய்தி...