தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின் விசாரணைக்காக நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்படுவர்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின் விசாரணைக்காக நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்படுவர்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின் 28வது கட்ட விசாரணை கடந்த 5-ந்தேதி தொடங்கி கடற்கரை சாலையில் உள்ள அலுவலகத்தில் 15.7.21 நிறைவு பெற்றது.
இதுகுறித்து ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 28-வது கட்ட விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக துப்பாக்கிச்சூடு அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 102 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதில் 95 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மொத்தமாக 28 கட்ட விசாரணையையும் சேர்த்து இதுவரை 1153 பேருக்கு ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டதில் 813 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
இதில் 718 பேர் மனுதாரர் தரப்பு சாட்ச...
