வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின்  விசாரணைக்காக நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்படுவர்

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின்  விசாரணைக்காக நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்படுவர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின் 28வது கட்ட விசாரணை கடந்த 5-ந்தேதி தொடங்கி கடற்கரை சாலையில் உள்ள  அலுவலகத்தில் 15.7.21  நிறைவு பெற்றது.

இதுகுறித்து ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர்  செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

 

அப்போது அவர் கூறுகையில், 28-வது கட்ட விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக துப்பாக்கிச்சூடு அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 102 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதில் 95 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மொத்தமாக 28 கட்ட விசாரணையையும் சேர்த்து இதுவரை 1153 பேருக்கு ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டதில் 813 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
இதில் 718 பேர் மனுதாரர் தரப்பு சாட்சியம். 94 பேர் காவல்துறை சார்பில் சாட்சியம் அளித்தவர்கள். ஒருவரை ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பி விசாரித்து உள்ளோம்.
இதுவரை மொத்தம் 1150 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 1127 ஆவணங்கள் மனுதாரர் தரப்பிலிருந்தும், காவல்துறையில் சார்பில் 23 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இன்னமும் 300 நபர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.  விசாரணைக்கு ரஜினி நேரில் ஆஜராவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பப்படுமா என கேள்வி எழுப்பியதற்கு, ஆணையம் தரப்பிலிருந்து விளக்கம் தேவைப்படும் நபர்களுக்கு மட்டுமே சம்மன் அனுப்பப்படும்.
எனவே முன்னாள் முதல்வருக்கு சம்மன் அனுப்புவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக அரசிடம் ஒரு நபர் ஆணையம் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
அதற்கு ஆணையம் தரப்பிலிருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இடைக்கால அறிக்கையில் பரிந்துரைத்த கோரிக்கைகளை அவர் ஏற்று அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேலையும், நிவாரணத்தையும் வழங்கியுள்ளார்.
ஆணையம் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பரத்வாஜ் என்பவர் சிறைக்கு சென்ற பிறகே இறந்தார் என்பது தெரிய வந்தது. எனவே பரத்வாஜின் குடும்பத்தினருக்கு மட்டும் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விசாரணையை முடிக்க கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இல்லையெனில் இதற்குள் விசாரணை முழுமையாக நடைபெற்று முழு அறிக்கையும் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கும்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆணையத்தின் முன்பு ஆஜராகும் காவலர்கள் இழப்பீடு கேட்டு அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். அதில் தகுதியானவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இதுவரை 95 பேர் அவர்கள் தரப்பிலிருந்து இழப்பீடு கேட்டு உள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டுள்ள தகவலின் உண்மைத்தன்மை அடிப்படையில் தகுதியானவர்களுக்கு ஆணையம் தரப்பிலிருந்து பாகுபாடின்றி நிவாரணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்தடுத்த கட்ட விசாரணைக்கு ஸ்டெர்லைட் குடியிருப்பில் தங்கியிருந்தவர்கள், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களை உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள், தடய அறிவியல் காவலர்கள் மற்றும் அன்றைய தினம் பணியிலிருந்த காவல் கண்காணிப்பாளர், தென் மண்டல காவல்துறை தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்.
ஒரு நபர் ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற உள்ளது.  இந்த விசாரணையில்  வழக்கறிஞர் ஹென்றி திபேன் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்காக அழைக்கப்படுவர் என்றார்.
நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவது குறித்து பின்னர் முடிவு செய்யப்பட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
190 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன