மராட்டியத்தில் ஆட்சியை சீர்குலைக்க நினைத்தால்…. பா.ஜ.க.,வுக்கு- சிவசேனா எச்சரிக்கை
மராட்டியத்தில் ஆட்சியை சீர்குலைக்க நினைத்தால்.... பா.ஜனதாவுக்கு- சிவசேனா எச்சரிக்கை
மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் சரியாக நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறி அவர் கமிஷனர் பணியில் இருந்து மாற்றப்பட்டார்.
இந்தநிலையில் பரம்பீர் சிங், மாநில உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மீது ஒரு முக்கிய குற்றச்சாட்டை கூறினார். உள்துறை மாதம் மாதம் ரூ.100 கோடி கமிஷன் பணம் வசூலித்து தரும்படி வற்புறுத்தியதாகவும், அதை ஏற்க மறுத்ததால் தன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
இந்த பிரச்சினை மராட்டியத்தில் பெரிய விஷயமாக வெடித்துள்ளது. உள்துறை மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதா வற்புறுத்தி வருகிறது.
அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என்று சரத்பவார் அறிவித்து இருக்கிறார். இந்தநிலையில் சி...