சுட்டுப்பிடிக்க உத்தரவு ரொம்ப கஷ்டம் – கோடங்கி விமர்சனம்
காதுல பூ வைக்கலாம்... தலையில பூ வைக்கலாம் பூக்கூடைக்குள்ள தலைய புடிச்சி அமுக்கலாமோ... மூச்சு திணறி செத்துற மாட்டாளா...
அப்படி இருக்கு கல்பதரு கம்பேனி தயாரிச்சிருக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படம்.
கதை: வணிக வளாகத்துல இருக்கும் வங்கியில விக்ராந்த, சுசீந்திரன் இவங்களோட இன்னும் 2 பேர் சேந்து போய் கொள்ளை அடிக்கிறாங்க. அப்போ நடக்கும் சண்டையில பலபேர் செத்து போறாங்க... தப்பிச்சி ஓடும் கொள்ளையர்களை பிடிக்க கமிஷனர் மிஷ்கின் வருகிறார். அவரையும் அடித்து போட்டு விட்டு ஒரு காரில் கொள்ளையர்கள் தப்பித்து கோவை ஆர்.எஸ். புரம் குடியிருப்பு பகுதியில் போகும் போது கார் கவிழ்த்து விபத்து ஏற்படுகிறது. அங்கிருந்து தப்பி ஒளிந்து கொள்கிறார்கள். அவர்களை பிடிக்க போலீஸ் அந்த பகுதியை சுற்றி வளைக்கிறது.
கொள்ளையர்கள் பதுங்கிய அதே பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் குண்டு வ...