தப்ளிக் ஜமாத் மீது பொய் குற்றச்சாட்டு கூறிய உள்துறை அமைச்சகமும் மத்திய அரசும் மன்னிப்பு கேட்க வேண்டும் -சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தப்ளிக் ஜமாத் மீது பொய் குற்றச்சாட்டு கூறிய உள்துறை அமைச்சகமும் மத்திய அரசும் மன்னிப்பு கேட்க வேண்டும் -சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கொரோனா பரவலுக்கு காரணமானவர்கள் என்று கைது செய்யப்பட்ட தப்ளிக் ஜமாத் அமைப்பை சேர்ந்த மேலும் 36 பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இதன் மூலம் கொரோனா பரவலுக்கு காரணம் என்று கூறி கைது செய்யப்பட வெளிநாட்டவர் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எந்தவித ஆதாரமின்றி மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் கொரோனா தீவிரமாக பரவ தொடங்கியிருந்த கால கட்டத்தில் டெல்லியில் இஸ்லாமிய சர்வதேச மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி...
