ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 13 தமிழர்கள் வெற்றி வாகை சூட சீமான் வாழ்த்து
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 13 தமிழர்கள் வெற்றி வாகை சூட சீமான் வாழ்த்து
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கவிருக்கிறார்கள்.
அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க, துப்பாக்கி சுடுதல் பிரிவில் இளவேனில் வாலறிவன், பாய்மரப் படகுப்போட்டி பிரிவில் நேத்ரா குமணன், வருண் தாக்கர், கணபதி, மேடை வரிப்பந்து பிரிவில் சத்யன், சரத் கமல், வாள் சண்டை பிரிவில் பவானி தேவி, தடகளப்பிரிவில் ரேவதி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் தம்பி ம...
