TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம்
குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? கண்டறிய விசாரணை தீவிரம்!
தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்கள், குடும்ப பின்னணி குறித்தும் விரிவாக விசாரித்தனர். 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
வெளி மாவட்டத்தில் இருந்து ராமேசுவரம், கீழக்கரை பகுதியில் தேர்வு எழுதியதற்கான காரணம் குறித்து கேட்டபோது, திதி கொடுப்பதற்காக ராமேசுவரம் வந்ததால் அங்கு தேர்வு எழுதினேன் என்று 10-க்கும் மேற்பட்டோர் பதில் அளித்தனர். சிலர் தொழில் விஷயமாக ராமேசுவரம் வந்ததால் இங்கு தேர்வு எழுதியதாக தெரிவித்தனர். இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.
இதனிடையே டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி நந்தகுமார், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கேள்வித்தாள்கள் வைக்கப்பட்டிருந்த கருவூல அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
தேர்வு மையங்களுக்கு கேள்வித்தாள்கள் எப்போது கொண்டு ச...