தமிழ்நாட்டில் முதல் திருநங்கை தமிழ்செல்விக்கு அரசுப்பணி!
தமிழ்நாட்டில் திருநங்கையாக பதிவு செய்து படித்து முடித்த முதல் திருநங்கை தமிழ்செல்விக்கு அரசுப் பணி கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் திருநங்கையாக பதிவு செய்து படித்து முடித்த முதல் திருநங்கை தமிழ்செல்வி ஆவார்.
இவருக்கு தற்போது தேசிய மருத்துவ திட்டத்தின் கீழ் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உதவியாளர் பணி ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கணணு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி.
எல்லா திருநங்கைகளையும் போலவே தனது குழந்தைப் பருவத்தில் வீட்டிலும் பள்ளியிலும் துன்புறுத்தல்கள் சந்தித்துள்ளார்.
ஆனால் படிப்பு தான் தனக்கு கை கொடுக்கும் என உணர்ந்த அவர் பல இன்னல்களை தாண்டி பள்ளிப்படிப்பை முடித்தார்.
அதன் பின் செவிலியர் படிப்புக்கு விண்ணப்பித்த போது திருநங்கைகள் விண்ணப்பிக்க முடியாது என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அவரது விண்ணப்பத்...
