ஆற்று மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு…!
ஆற்று மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு...!
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆற்று மணலை எடுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கான எளிய வழிமுறைகளை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், ஏழை, எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி எடுத்துச் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பொதுமக்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை, பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இருப்பை பொருத்து வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
தற்பொழுது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சு...
