புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

`கரு’ படத்தின் பெயரை தியா என மாற்றிய படக்குழு..!

`கரு’ படத்தின் பெயரை தியா என மாற்றிய படக்குழு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கரு'. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் பெயர் தியா என மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்மையை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சாய் பல்லவியுடன், நாக சவுரியா, வெரோனிகா அரோரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது...
நிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை

நிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் விசாரணை சூடுபிடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நிர்மலாதேவியை 5 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 20-ந்தேதி முதல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று 3-வது நாளாக விசாரணை தொடர்கிறது. விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்தே போலீசார் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரையில் அவர் வெளியில் எங்கும் அழைத்துச் செல்லப்படவில்லை. நிர்மலாதேவியை போலீஸ் காவலில் எடுப்பதற்கு முன்னர் அவரால் பாலியல் அழைப்புக்குள்ளான 4 மாணவிகளிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேவாங்கர் கல்லூரியில் ரகசியமாக விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகள் 4 பேரும் நிர்மலாதேவியின் பாலியல் தொல்லை குறித்து பரபரப்பு தகவல்களை ...
‘ராஜாவுக்கு செக்’ என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும்!

‘ராஜாவுக்கு செக்’ என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ் திரையுலகை சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் விலகி விட்டது. மீண்டும் ஒளி வீசத்துவங்கி, திரைத்துறையிலும் பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த ராஜாவுக்கு செக் படம் மீண்டும் பணிகளை துவக்கியுள்ளது. சேரன், நந்தனா வர்மா, சராயு மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, இர்ஃபான் ஆகியோர் நடிக்கிறார்கள். மலையாள திரைத்துறையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் தயாரிப்பாளர் களான சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் இந்த படத்தை பல்லாட் கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் சார்பில் தயாரிக்கிறார்கள். படத்தை பற்றி பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளதாக சொல்கிறார்கள். மலையாள திரையுலகில் கதை ரீதியாகவும், தரம் ரீதியாகவும் நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை பெற்றிருக்கிறோம். உலகம் முழுக்க தமிழ் சினிமாவின் பரவலும், வர்த்தகத்துக்கு நிறைய வாய்ப்புகளும், மிகுதியான திறமையாளர்களும் இருப்பதா...
ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகிறது விக்ரம் பிரபு-வின்  “ பக்கா “!

ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகிறது விக்ரம் பிரபு-வின் “ பக்கா “!

MOVIES, திரைப்படங்கள்
பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “  .                                                                                           விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக  நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார். ஒளிப்பதிவு           -  எஸ்.சரவணன் / இசை   -  C.சத்யா  / பாடல்கள்   -   யுகபாரதி, கபிலன்  கலை   -  கதிர் /  நடனம்   -   கல்யாண்,  தினேஷ் ஸ்டன்ட்   -  மிராக்கிள் மைகேல் / எடிட்டிங்    -  சசிகுமார்                             ...
தமிழ், தமிழீழ மக்களுக்கு மருந்துகள் இலவசம்: திவ்யா சத்யராஜ் அதிரடி

தமிழ், தமிழீழ மக்களுக்கு மருந்துகள் இலவசம்: திவ்யா சத்யராஜ் அதிரடி

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து மருத்துவருமான திவ்யா சத்யராஜ் தமிழக மற்றும் தமிழீழ மக்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்க முடிவு செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் ஈழத்து தமிழர்களுக்கும், தமிழகத்தில் வசிக்கும் வசதியில்லாத மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து முகாம் ஒன்றை நடத்தினார். இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் ஊட்டச்சத்து சம்பந்தமான ஆலோசனையும், இலவச விட்டமின் மாத்திரைகளையும் வழங்கினார். இது பற்றி திவ்யா சத்யராஜ்  கூறுகையில், ‘சிறுவயது முதலே ஊட்டச்சத்து நிபுணராக வேண்டும் என்பது என் ஆசை. என் படிப்பு தமிழ்நாட்டில் வாழும் ஏழை மக்களுக்கும், ஈழத்து தமிழர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் பெருங்கனவாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பற்றியும், ஊட்டச்சத்து குறைபாடு பற்றியும் ஆராய்ச்சி செய்து வந்...
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, தொடர்ந்து வட மாநிலங்களில் பல பகுதிகளில் இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோர் மீதான சட்டம் மற்றும் தண்டனைகளை மக்கள் கவனிக்கத்  தொடங்கியுள்ளனர்.  மேலும், இது போன்று பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனை யாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதுக்கு எதிராகப் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், `12 வயதுக்குட...
முற்றிலும் புதியவர்கள் கூட்டணியில் ‘சந்தோஷத்தில் கலவரம்’

முற்றிலும் புதியவர்கள் கூட்டணியில் ‘சந்தோஷத்தில் கலவரம்’

MOVIES, திரைப்படங்கள்
முற்றிலும் புதியவர்களின் கூட்டணியில் 'சந்தோஷத்தில் கலவரம்' என்கிற படம் உருவாகி வருகிறது.   இப்படத்தைக் கிராந்தி பிரசாத்  இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இபக்கியவர்.  அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் ,தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர் . இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம் . தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும்  தரப்படும்  மரியாதையை வைத்து  தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார் ' ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் 'சந்தோஷத்தில் கலவரம் 'என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி  வி.சி. தயாரிக்கிறார் . "ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் 'தீமைக்கும் நன்மைக்கும்  இடை...
பெண் பத்திரிகையாளர்களை தப்பாக பேசிய எஸ்.வி.சேகர் வீட்டில் கல் வீச்சு!

பெண் பத்திரிகையாளர்களை தப்பாக பேசிய எஸ்.வி.சேகர் வீட்டில் கல் வீச்சு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுனருடனான பத்திரிகையாளர்கள் சந்திப்பு குறித்து வேறு ஒரு நபர் பதிந்திருந்த கருத்துக்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிபடுத்தும் விதத்திலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஜநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படுகிற பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை அள்ளி வீசிய எஸ்.வி சேகருக்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரிடமிருந்தும் கடுமையான எதிர்வினைகள் ஆற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், சென்னையிலுள்ள எஸ்.வி சேகர் வீட்டை முற்றுகையிட்டு அவரின் இழி செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள். தொடர்ந்து எஸ்.வி சேகர் வீட்டின் மேல் கல் எரிந்தும் தங்களது எதிர்ப்பினை பத்திரிகையாள...
ஸ்டன்ட் யூனியன் விழாவில்  விஜய்சேதுபதி ரத்ததானம் செய்தார்!

ஸ்டன்ட் யூனியன் விழாவில் விஜய்சேதுபதி ரத்ததானம் செய்தார்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
ஸ்டன்ட் யூனியன் துவங்கப் பட்ட நாளான இன்று  ஸ்டன்ட் யூனியன்  51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக கொண்டாப்பட்டது. எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏராளமான உறுப்பினர்கள் ரத்த தானம், கண் தானம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஸ்டன்ட் யூனியனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நண்கொடையாக வழங்கினார். இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது..ரத்ததானம் கண்தானம் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, ஸ்டன்ட் காட்சிகளில் கொஞ்சம் நிதானத்தையும் கடைபிடியுங்கள் என்று அறிவுரை கூறினார். கண் மருத்துவரும் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகனுமான  டாக்டர் விஜய்சங்கர் இலவச கண் சி...