பயிர் வளர்க்கும் விவசாயிகள் உயிர் வலியை அரசுக்கு அழுத்தமாக சொல்லும் “கொலை விளையும் நிலம்” ஆவண படம்..!
பயிர் வளர்க்கும் விவசாயிகள் உயிர் வலியை அரசுக்கு அழுத்தமாக சொல்லும் "கொலை விளையும் நிலம்" ஆவண படம்..!
தமிழகத்தில் விவசாயத்தை முற்றிலும் அழித்து அண்டை மாநில அரசுகளிடம் கையேந்த சதி நடக்கிறது என்ற அதிர்ச்சி உண்மையை தனது கொலை விளையும் நிலம் ஆவண படம் மூலமாக ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார் பத்திரிக்கையாளர் ராஜீவ்காந்தி.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியாத அரசுகள் என சாடுவதோடு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பங்களில் இன்றை சூழலையும் பதிவு செய்திருக்கிறார்.
சுமார் 50 நிமடம் ஓடும் இந்த ஆவண படத்தை சக பத்திரிகையாளர் கவிதாவும் , கத்தாரில் உள்ள சதகதுல்லாவும் தயாரித்திருக்கிறார்கள்.
ராஜூ முருகன் பாடல் வரிகளுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். ஜோகன் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.
இதன் திரையிடல் நிகழ்ச்சியில் இயக்குனர்கள் லிங்குசாமி, எழில், சீனு ராமசாமி, பாலாஜி சக்திவேல...









