ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21
Shadow

Author: Kodanki

பயிர் வளர்க்கும் விவசாயிகள் உயிர் வலியை அரசுக்கு அழுத்தமாக சொல்லும் “கொலை விளையும் நிலம்” ஆவண படம்..!

பயிர் வளர்க்கும் விவசாயிகள் உயிர் வலியை அரசுக்கு அழுத்தமாக சொல்லும் “கொலை விளையும் நிலம்” ஆவண படம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
பயிர் வளர்க்கும் விவசாயிகள் உயிர் வலியை அரசுக்கு அழுத்தமாக சொல்லும் "கொலை விளையும் நிலம்" ஆவண படம்..! தமிழகத்தில் விவசாயத்தை முற்றிலும் அழித்து அண்டை மாநில அரசுகளிடம் கையேந்த சதி நடக்கிறது என்ற அதிர்ச்சி உண்மையை தனது கொலை விளையும் நிலம் ஆவண படம் மூலமாக ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார் பத்திரிக்கையாளர் ராஜீவ்காந்தி. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியாத அரசுகள் என சாடுவதோடு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பங்களில் இன்றை சூழலையும் பதிவு செய்திருக்கிறார். சுமார் 50 நிமடம் ஓடும் இந்த ஆவண படத்தை சக பத்திரிகையாளர் கவிதாவும் , கத்தாரில் உள்ள சதகதுல்லாவும் தயாரித்திருக்கிறார்கள். ராஜூ முருகன் பாடல் வரிகளுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். ஜோகன் பின்னணி இசை அமைத்திருக்கிறார். இதன் திரையிடல் நிகழ்ச்சியில் இயக்குனர்கள் லிங்குசாமி, எழில், சீனு ராமசாமி, பாலாஜி சக்திவேல...
இன்றைய அவலத்தையும் நாளைய பிரச்சனையயும் சொல்லப் போகும் ” வேலை இல்லா விவசாயி “

இன்றைய அவலத்தையும் நாளைய பிரச்சனையயும் சொல்லப் போகும் ” வேலை இல்லா விவசாயி “

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் “ வேலையில்லா விவசாயி “                                                                          கதாநாயகியாக பிஸ்மயா நடிக்கிறார். மற்றும் வாகை சந்திரசேகர்  ஆகியோர் நடிக்கிறார்கள்.      கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு,  இயக்கம் -  P.V.பிரசாத்.                         இவர் மாபெரும் வெற்றி காதலில் விழுந்தேன் படத்தை இயக்கியவர். வேலை இல்லா விவசாயி என்கிற இந்த கதைக் கருவை எடுக்க காரணம் என்ன என்று பி.வி பிரசாத் கூறும் போது... எங்கள் குடும்பம் விவசாய குடும்பம்..செய்யாரை சுற்றி நிறைய நிலம் எங்களுக்கு இருந்தது. இருந்தது என்று தான் சொல்ல முடியுமே தவிர இருக்கிறது என்று சொல்ல முடியாது. கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாம் பசுமையாக காட்சி தந்த அந்த விவசாய நிலங்கள் எல்லாம் பங...
தயாரிப்பாளர் ஆன நான் கடவுள் ராஜேந்திரன்   “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா

தயாரிப்பாளர் ஆன நான் கடவுள் ராஜேந்திரன் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
TN 75 KK.கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் திருமுருகன், பாலகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “ கதாநாயகனாக அகில் நடிக்கிறார். சதுரங்கவேட்டை இஷாரா நாயர், கமர்கட்டு படத்தில் நடித்த ரஹானா, சஹானா, கிருஷ்ணபிரியா என்ற புதுமுகம் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, பாலாசிங், சிவசங்கர், சூப்பர் சுப்பராயன், கௌசல்யா, ஷகீலா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கெவின் தயாரிப்பு   -  திருமுருகன், பாலகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள். படம் பற்றி இயக்குனர்.. கெவின் கூறியதாவது... தினமும் சென்னைக்கு நூற்றுக்கணக்கான பேர் பிழைப்புக்காக பல ஊர்களில் இருந்து வருகிறார்கள் அப்படி வருகிறவர்களில் 100 பேராவது சினிமா கனவுகளுடன் வருகிறார்கள் அப்படி சினிமாவிற்காக வந்து வாய்ப்பு கிடைக்காமல் ...
பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் “ சகுந்தலாவின் காதலன்  “                                            

பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் “ சகுந்தலாவின் காதலன்  “                                            

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் “ சகுந்தலாவின் காதலன்  “                                                                         நாயகியாக பானு நடிக்கிறார். மற்றும் கருணாஸ், சுமன், பசுபதி, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன், ராஜ்கபூர், மனோபாலா, மனோ சித்ரா, ஜார்ஜ், நிப்பு, ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.          கதை, திரைக்கதை, பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம்  - P.V.பிரசாத்                                                இவர் மாபெரும் வெற்றி காதலில் விழுந்தேன் படத்தை இயக்கியவர்.                                            சகுந்தலாவின் காதலன் படத்தின் இயக்குனரும் நடிகருமான p.v .பிரசாத் கூறியதாவது...காதலில் விழுந்தேன் எப்படி ஜனரஞ்சகமான படமாக வெற்றி பெற்றதோ அது மாதிரி சகுந்தலாவின் காதலனும் வெற்றி பெறும்..  இதில் அத்தனையும...
பிரபல கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த்  – நிக்கிகல்ராணி நடிக்கும்  “ டீம் 5 “

பிரபல கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் – நிக்கிகல்ராணி நடிக்கும் “ டீம் 5 “

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
                                                ரெட் கார்பட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ராஜ் ஜக்காரியாஸ் மிக பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கும் படத்திற்கு “ டீம் 5 “ என்று பெயரிட்டுள்ளார். பிரபல இந்திய கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்த படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக கால்பதிக்கிறார். நாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் மலையாளத்தின் முன்னணி நாயகியான பேர்லேமேனி இன்னொரு நாயகியாகவும், மாராட்டியின் முன்னணி நடிகரான தேஷ் பாண்டே முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.            ஒளிப்பதிவு   -  சைஜித் / இசை   -  கோபிசுந்தர்                                                                                    வசனம்  -  நந்து கிஷோர்  /  பாடல்கள்  -  வைரபாரதி                                                                      எடிட்டிங் ...
தியேட்டர் கட்டணம் உயர்வு: கேளிக்கை வரி பிரச்சினையில் பெரும் பேரம் நடந்துள்ளது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தியேட்டர் கட்டணம் உயர்வு: கேளிக்கை வரி பிரச்சினையில் பெரும் பேரம் நடந்துள்ளது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, செய்திகள்
தியேட்டர் கட்டணம் உயர்வு: கேளிக்கை வரி பிரச்சினையில் பெரும் பேரம் நடந்துள்ளது - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசுடன் போராடி கோரிக்கையில் வெற்றி பெற முடியாத திரையரங்க உரிமையாளர்கள், இப்போது திரையரங்க நுழைவுச் சீட்டுக் கட்டணத்தை 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. இது கண்டிக்கத்தக்கதாகும். கேளிக்கை வரி குறித்து முடிவெடுப்பதற்காக இரு தரப்பு பிரதி நிதிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக திரையரங்க உரிமையாளர்களே தெரிவித்துள்ளனர். இந்தக் குழுக்களுக்கு இடையிலான பேச்சுக்கள் அடுத்த சில நாட்களில் முடிவடைய வாய்ப்பிருக்கிறது. ...
நினைவு நாளில் திறக்கப்படும் சிவாஜி மணிமண்டபம்..!  கடற்கரையிலேயே சிலை வைக்கவும் கோரிக்கை

நினைவு நாளில் திறக்கப்படும் சிவாஜி மணிமண்டபம்..! கடற்கரையிலேயே சிலை வைக்கவும் கோரிக்கை

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
    தமிழ் திரையுலகில் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ‘நடிகர் திலகம்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர். பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரரான சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி மரணம் அடைந்தார். அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு அரசிடம் இடம் கேட்கப்பட்டது. இதனை யடுத்து 2002-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே 28 ஆயிரத்து 300 சதுரடி இடம் ஒதுக்கி கொடுத்தார். பின்னர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. ஆனால் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் சிவாஜி கணேசன் முழு உருவச்சிலையை அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார். அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு ம...