ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28
Shadow

Author: Kodanki

ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல! – எடப்பாடி விளக்கம்!

ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல! – எடப்பாடி விளக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல எனவும் அனைத்து மதத்திற்கும் தமிழகத்தில் சம உரிமை உண்டு எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் விளக்கம் கொடுத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. கேரளாவைக் கடந்து தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தின் கோட்டை வாசல் பகுதியில் நுழைந்துள்ளது. அயோத்தியில் தொடங்கி, தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் வரும் 25ம் தேதி நிறைவு பெறுகிறது. மதநல்லிணக்கத்தை காக்கும் வகையில் இந்த ரதயாத்திரையை அனுமதிக்க கூடாது என எஸ்டிபிஐ, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஆகிய அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் அபுபக்கர் ஆகிய 4 எம்.எல்.ஏக்களும் நேற்று சட்டசபையில், ரத யாத்திரைக்கு தடை வ...
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின்  உதவி இயக்குனர்!

கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் “2.0” படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்கிறார்.    புகைப்படக் கலைஞராக வேண்டும் என அதீதமான ஈடுபாட்டுடன் இருக்கும் இளைஞன், காதல் மற்றும் குடும்பம் குறித்து எந்த விதமான பிரக்ஞையுமே இல்லாமல் இருக்கிறான். தனது குறிக்கோளுக்காக ஒரு கட்டத்தில் காதலையே உதறி, பின்னால் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் இறுதியில் வாழ்க்கை, அன்பு, குடும்பம் இவற்றின் மீதான மதிப்புகளை உணர்ந்து கொள்கிறான். இதுவே “மேகம் செல்லும் தூரம்” வீடியோ பாடலின் சாராம்சம்.    இந்த பாடலை படமாக்குவதற்காக ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண், உதவி இயக்குநர் விக்னேஷ்ராஜ் மற்றும் விக்னேஷ் குமார் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு மட்டுமே இமாச்ச...
சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் காலமானார்.

சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் காலமானார்.

HOME SLIDER, NEWS, செய்திகள்
சசிகலாவின் கணவர் நடராசன், கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை யில் உள்ள சசிகலா 5 நாள்கள் பரோலில் வந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், நடராசனைக் காண சசிகலாவுக்கு மீண்டும் பரோல் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காததால் நள்ளிரவு 1.35 மணியளவில் நடராசன் மரணமடைந்தார். இதை, மருத்துவமனை நிர்வாகம் உறுதிசெய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவரது உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங் முடிந்த பின், சென்னை பெசன்ட் நகர் வீட்டில் காலை 7 மணியளவில் அஞ்சலிக்காக வைக்க...
அதிமுக எம்.பி சசிகலாவிற்கு டெல்லியில் திருமணம்?

அதிமுக எம்.பி சசிகலாவிற்கு டெல்லியில் திருமணம்?

HOME SLIDER, NEWS, செய்திகள்
அதிமுக எம்.பி சசிகலாவிற்கு டெல்லியில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக-வின் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் சசிகலா புஷ்பா. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சசிகலாவும் அவரும் சேர்ந்து தன்னை தாக்கியதால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க இவர் கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்கியதும் அடுத்த பரபரப்பாக சசிகலா புஷ்பாவும், திமுக எம்.பி., திருச்சி சிவாவும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்ததாக அவர் வீட்டு பணிப்பெண்கள் சசிகலா புஷ்பாவால் தாங்கள் துன்புறுத்தப்படுகிறோம் என்று தூத்துக்குடி காவல்துறையிடம் புகார் அளித்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா புஷ...
நான்கு மொழிகளில் தயாராகும் மன்சூரலிகானின் “கடமான்பாறை“

நான்கு மொழிகளில் தயாராகும் மன்சூரலிகானின் “கடமான்பாறை“

MOVIES, திரைப்படங்கள்
பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.   அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக  நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா...
ஆதார் தகவல்களை இணையத்தில் பகிரும் போது பீ கேர்ஃபுல்! – ஆணையம் வார்னிங்

ஆதார் தகவல்களை இணையத்தில் பகிரும் போது பீ கேர்ஃபுல்! – ஆணையம் வார்னிங்

HOME SLIDER, NEWS, செய்திகள்
எந்த ஒரு சேவையையும் பெறுவதற்கு ஆதார் தகவல்களை இணையதளத்தில் பகிரும்போது, முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு ஆதார் ஆணையம் திடீரென எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங் களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் உள்ளதால், ஆதார் வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரையில், வங்கி கணக்குகளுடனும், செல்போன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள், சலுகைகளைப் பெறுவதற்கும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியீடு

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியீடு

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ்,கவுரவ தலைவர் பதவிக்கு இயக்குநர் விக்ரமன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக கே.பாக்யராஜ்மற்றும் கவுரவ தலைவராக இயக்குநர் விக்ரமன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் செயலாளராக மனோஜ்குமாரும், பொருளாளராக ரமேஷ் கண்ணாவும் போட்டியின்றி தேர்வாகினர். துணைத் தலைவர்களாக ஆர்.கே.செல்வமணி மற்றும் யார் கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக பேரரசு, மனோபாலா, வெங்கடேஷ், அரிராஜன், லியாகத் அலிகான், சின்னி ஜெயந்த், பாலசேகரன், ...
முத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டி;.இந்திய அணி.திரில் வெற்றி !!

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டி;.இந்திய அணி.திரில் வெற்றி !!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முத்தரப்பு டி 20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் வங்காள தேச அணியை வீழ்த்தி இந்திய அணி சாட்பியன் பட்டத்தை வென்றது. இலங்கையில் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இலங்கை அணியை வெளுத்து வாங்கி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வங்கதேச அணியுடன் இந்திய அணி நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் சிராஜ் நீக்கப்பட்டு உனத்கட் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காள தேச அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி முதல் மூன்று ஓவரில் 26 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் லித்தோன் தாஸ் ஆட்டமிழந்தார். அவர் 9 பந்தில் 11 ரன்கள் சேர்த்தார். சுந்தர் இந்த ஓவரில் ஒரு ரன் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அடுத்த ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவ...
நடராஜன் உடல் நிலை கவலைக்கிடம்: பரோல் கேட்கிறார் சசிகலா!

நடராஜன் உடல் நிலை கவலைக்கிடம்: பரோல் கேட்கிறார் சசிகலா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், கணவரைப் பார்ப்பதற்காக சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய பார்வை ஆசிரியரும், சசிகலா கணவருமான நடராஜன் கல்லீரல் பிரச்சினை காரணமாகச் சென்னையை அடுத்த குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குக் கடந்த அக்டோபர் மாதம் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடராஜன், வெளிநிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று நடராஜனுக்குத் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடராஜன் உடல்நிலை குறித்து பரவும...
வெற்றிமாறனின்  கம்பெனியுடன் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் இணைந்து மிக மிக அவசரம்  ர்லீஸ்!

வெற்றிமாறனின் கம்பெனியுடன் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் இணைந்து மிக மிக அவசரம் ர்லீஸ்!

CINI NEWS, திரைப்படங்கள்
சில படங்கள் திரைக்கு வரும் முன்பே ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டு வரும். காக்கா முட்டை, கோலிசோடா, லென்ஸ், துருவங்கள் 16, அருவி போன்ற படங்கள் வெற்றியைத் தீர்மானித்துவிட்டு மக்களை ஈர்த்த படங்களாக வரிசைப்படுத்தலாம்..  அதேபோல, மிக மிக அவசரம் படத்திற்கான அதிர்வு படம் பார்த்தவர்கள் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வேகமாகப் பரவி வருகிறது.    பார்த்துப் பார்த்து படம் பண்ணும், நுணுக்கமான தேர்வு மூலம்  சிறு படங்களுக்கு கைகொடுக்கும் இயக்குநர் வெற்றி மாறன் இப்படத்தை வெளியிட முன் வந்ததிலாகட்டும்,    கோலிசோடா2  டத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளவரும், முக்கியமான திரையரங்குகளில்  படத்தை வெளியிட்டு, அதைத் தெளிவாக மக்களிடம் கொண்டு செல்வதில் நல்ல பெயர் எடுத்திருப்பவருமான கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் வி சத்தியமூர்த்தி   இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து வெளியிட முன் வந்திருப்பதிலாகட்டும்,   மிக மிக அவச...